புதன், 8 அக்டோபர், 2008

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கும் எனக்குமான
உறவில் விரிசல்
தவிக்கிறேன், தவிக்கிறாய்
ஏன் என்பதன் காரணம்
சொல்ல மறுக்கிறாய்
தவிக்கவைக்கிறாய்
தொடர்பு கொள்ள கூடாது என்றாய்
நானும் நீயும் வாழ்ந்ததும்
வாழ்வதும் திரைப்படம் இல்லை
உண்மையான வாழ்க்கைதானே?
உன்னிடம் என் காதலை சொல்ல
நேரம் தவறியிருக்கலாம்
அதற்காகவா இந்த விரிசல்
இல்லை உன்னிடம் உரிமையில்
நான் நடந்துகொண்டதற்காகவா?
எதற்குமே கலங்காத நீ
எனக்காக ஏன் கலங்கினாய்?
உனக்கு பிடிக்காத யாரையும்
கோபித்து கொள்ளாத நீ
ஏன் என்னை கோபிக்கிறாய்?
எதுவுமே நடக்காதது போல்
நடிக்கிறாய் ஆனால்
என்னை கவனிக்கிறாய்,
ரசிக்கிறாய்,சுவைக்கிறாய்
நான் உணர்ந்துகொள்கிறேன்
ஆனால் மன்னிப்பும் பலமுறை
கேட்டுவிட்டேன்
மன்னித்து விட்டாயா?
இல்லை மரணிக்கசொன்னாயா?
எல்லாமே கேள்விகள் தானா?
என்று யோசிக்கிறாயா
எதுவுமே கேள்வி இல்லை
என் ஆதங்கம், என் உணர்வு
எழுத்துக்கள் கூட பேசுவதாய் உணர்கிறேன்
அதனால் எழுதுகிறேன்
உன்னுடன் வாழ்ந்த நாட்களில்
ஒரு யுகம் வாழ்ந்ததை உணர்கிறேன்
உன்னை குற்றவாளியாக்கி
என்னை நியாதிபதியாக்க
நான் விரும்பவில்லை
என்றும் உனக்காக காத்திருப்பேன்
ஆம் உன்னிடம் மட்டும் தானே
மன்னிப்பு கேட்டேன்
உன்னிடம் மட்டும் தானே
மன்னிப்பு கேட்கவும் முடிந்தது,முடிகிறது
உன்னிடம் மட்டும் தானே உரிமையாய்
நடந்து கொள்ள முடிந்தது,முடிகிறது
என்னை புரிந்து கொண்டாய்
ஆனால் ஏன் என்னை
தவிக்க வைக்கிறாய்
நான் உன்னை ரசிக்கிறேன்,
காதலிக்கிறேன், சுவைக்கிறேன்,
சிந்திக்கிறேன், நிந்திக்கிறேன்,
உன்னோடு வாழ்வதை உணர்கிறேன்,
ஆனாலும் துடிக்கிறேன்
கொலை குற்றவாளிக்குகூட
மன்னிப்பு உண்டு ஆனால்
உன் மனதை கொள்ளையடித்த
இந்த கொல்லை குற்றவாளிக்கு
மன்னிப்பு உண்டா?
உன் பதிலை, உன் மன்னிப்பை
உன் புரிதலை, உன் ஏற்றுக்கொள்ளலை,
உன் காதலை, உன் கோபத்தை,
உன் ஆதங்கத்தை, உன் உணர்வை,
உன் ஆசையை, உன் அன்பை,
உன் பாசத்தை, உன் நேசத்தை,
உன் நட்பை, உன் தோழமையை,
உன் எல்லாவற்றையும்,
நீ என்னோடு வாழும் வாழ்க்கையை
எதிபார்த்து காத்திருக்கிறேன்

அன்புடன்
நான்