சனி, 16 மே, 2009

அன்பைதருவாயடி

ஒருமுறை செய்த தவறுக்காக
பலமுறை ஏங்கி தவிக்கிறேன்
பலமுறை கேட்டேன் மன்னிப்பை
தவறு என்னுடையது தான்
தவறுவதும் மனித இயல்புதானே
இனிமேலும் கேட்பேன் மன்னிப்பை
ஆனாலும் ஏன்தான் அடம்கொள்கிறாய்
வலிக்கிறது மிகவும் வலிக்கிறது
சொல்லவும் எழுதவும் அளவுகோலில்லை
புரியமுடியும் உன்னால் மட்டும்தான்
ஆனாலும் அடம் கொள்கிறாய்
மன்னிப்பதும் மனிதகுணம் தானே
ஒருமுறை தவறியதற்க்கே இப்படியானால்
இனிமேலும் தவறிட மாட்டேன்
என்னை விடவும் அதிகமாய்
நீ காயமடைகிறாய்
புரிந்தும் உணர்ந்தும் விட்டேன்
ஆனாலும் உன்னால் என்னை
மறந்துவிடமுடியவில்லையடி
அருமையாய் நடித்து தான் பார்க்கிறாய்
என்னை வெறுப்பதாய்
அதிலும் உன்னால் என்னை
வெறுக்கமுடியவில்லையடி
உன் செயல்களும் உணர்வுகளும்
காட்டிகொடுக்கிறடி
உள்ளிருப்பதை வெளிக்காட்டிகொள்ள
உனக்கு ஏன் இந்த தயக்கமடி
வலிக்கிறதடி மிகவும் வலிக்கிறதடி
இனிமேலும் வலியை நிறுத்த
முன்வருவாயடி அன்பைதருவாயடி