திங்கள், 18 மே, 2009

இனிமேலும் என்னை காயபடுத்தாதே

ஒவ்வொருமுறையும்
கவலைகொள்கிறேன் நான்
கண்டுகொள்ளவில்லை நீ
ஏன் இந்த மொவ்னம்,
ஏன் இந்த தயக்கம்,
ஏன் இந்த சலனம்,
ஏன் இந்த வருத்தம்,
உண்மையிலே கலக்கமா,
இல்லை என்மேல் கோபமா
இனிமேலும் வலிகளை சொல்லியழ
யாருமில்லை எனக்கு
நீ போதும் எனக்கு
புரிந்துகொள்வாயென நினைக்கிறேன்
புரியாதவளல்ல நீ
உண்மையிலே கலக்கமுறுகிறேன்
வருத்தமடைய வைக்கிறாய்
உன் உடல்நிலையை
நீயே கவனிக்காவிட்டால்
வேறு யார்தான் கவனிப்பார்
சரியாகசாப்பிடுவதில்லை நீ
தினம் தினம் வேலைசெய்தே
களைப்படைகிறாய்
பலமணிநேரம் வேலைசெய்கிறாய்
சிலமணிநேரமாவது ஒய்வெடு
நன்றாக சாப்பிடு
உன்வலிகளை தாங்கும் சக்தி
எனக்கிருக்கிறது
எதுவாயினும் என்னிடம் சொல்லிவிடு
இனிமேலும் என்னை காயபடுத்தாதே

அன்புடன்
நான்

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

anbin velippaadu

பெயரில்லா சொன்னது…

arumai :-)