வெள்ளி, 17 ஏப்ரல், 2009

உன் அன்பை எனக்கு உடனே காட்டிவிடு

சேர்ந்திருந்த பொழுதுகளைவிடவும்
இப்போது தான் அதிகமாய் உன்னை
நேசிக்கிறேன்
தனித்து விடப்பட்ட கோழிகுஞ்சாய்
அல்லலுகிறேன்
காதலின் மகத்துவம் இப்போதான்
அதிகமாய் புரிகிறது
உன் இழப்பு என்னை மிகவும்
காயப்படுத்திற்று
இனிமேலும் உன்னை இழக்க நான்
விரும்பவில்லை
என்னையே சுமந்தவள் இல்லாமல்
திண்டாடுகிறேன்
எப்போது என்னிடம் வருவாய்
என் காயங்களுக்கு மருந்திடுவாய்
எப்போது என்னை தேற்றுவாய்
எப்போது என்னை அரவணைப்பாய்
நான் செய்த குற்றத்திற்காக இனிமேலும்
தண்டனை வேண்டாம்
மீண்டும் மீண்டும் இழப்புகளை
சந்திக்க விரும்பவில்லை
இனிமேலும் இழப்புகளை சந்திக்கும்
சக்தி எனக்கில்லை
போதும் இந்த தண்டனை
உன் அன்பை எனக்கு உடனே காட்டிவிடு

6 கருத்துகள்:

திருச்சிகாரன் சொன்னது…

nalla irukkunga... sema kadhal kavithai

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

பிரிவைச் சொல்லும் வரிகள்.. எளிமையா.. நல்லா இருக்குங்க..

தாரணி பிரியா சொன்னது…

பிரிவை சொல்லும் கவிதை. எளிய வரிகளில் அழுத்தமாய் மனசை காட்டி இருக்கிங்க :)

நான் சொன்னது…

நன்றி திருச்சிக்காரன்
உங்கள் பின்னூட்டத்திற்கு
தொடர்ந்து கருத்து சொல்லவேண்டுகிறேன்

நான் சொன்னது…

நன்றி ஆசிரியரே
உங்கள் பின்னூட்டத்திற்கு
தொடர்ந்து கருத்து சொல்லவேண்டுகிறேன்

நான் சொன்னது…

நன்றி தாரணி என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் அவளுக்கு இன்னும் புரியவில்லையே