சேர்ந்திருந்த பொழுதுகளைவிடவும்
இப்போது தான் அதிகமாய் உன்னை
நேசிக்கிறேன்
தனித்து விடப்பட்ட கோழிகுஞ்சாய்
அல்லலுகிறேன்
காதலின் மகத்துவம் இப்போதான்
அதிகமாய் புரிகிறது
உன் இழப்பு என்னை மிகவும்
காயப்படுத்திற்று
இனிமேலும் உன்னை இழக்க நான்
விரும்பவில்லை
என்னையே சுமந்தவள் இல்லாமல்
திண்டாடுகிறேன்
எப்போது என்னிடம் வருவாய்
என் காயங்களுக்கு மருந்திடுவாய்
எப்போது என்னை தேற்றுவாய்தண்டனை வேண்டாம்
மீண்டும் மீண்டும் இழப்புகளைபோதும் இந்த தண்டனை
உன் அன்பை எனக்கு உடனே காட்டிவிடு
6 கருத்துகள்:
nalla irukkunga... sema kadhal kavithai
பிரிவைச் சொல்லும் வரிகள்.. எளிமையா.. நல்லா இருக்குங்க..
பிரிவை சொல்லும் கவிதை. எளிய வரிகளில் அழுத்தமாய் மனசை காட்டி இருக்கிங்க :)
நன்றி திருச்சிக்காரன்
உங்கள் பின்னூட்டத்திற்கு
தொடர்ந்து கருத்து சொல்லவேண்டுகிறேன்
நன்றி ஆசிரியரே
உங்கள் பின்னூட்டத்திற்கு
தொடர்ந்து கருத்து சொல்லவேண்டுகிறேன்
நன்றி தாரணி என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் அவளுக்கு இன்னும் புரியவில்லையே
கருத்துரையிடுக