புதன், 3 செப்டம்பர், 2008

புரியவில்லை!

பிரியமானவளே!
நான் அமுதமல்ல
விஷமுமல்ல
அள்ளி பருகிட அமுதமல்ல
தொட்டு சுவைத்திட விஷமுமல்ல
இரண்டுக்கும் இடையில் நான்
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
கலந்த கலவை நான்
ஆனால் நீயோ என்னை
அமுதம் என்றாய் அமுதமும் ஆக்கினாய்
நானும் இல்லை என்று சொல்லவில்லை
அள்ளினாய், பருகினாய், சுவைத்தாய், ரசித்தாய்
திகட்டியதோ!
புரியவில்லை!
இப்போது விஷம் என்கிறாயா?
புரியவில்லை!
இன்னும் நீ சொல்லவும் இல்லை
ஆனால் அமுதம் தான் என்கிறாய் போலும்
அள்ளி பருகிட மறுக்கிறாய்
ஆனால் ரசிக்கிறாய் சுவைக்கிறாய்
புரியவில்லை எனக்கு இன்னும்
ஆனால் நானோ இன்னும்
உன்னை அமுதம் என்கிறேன்
அள்ளிடுவேன், பருகிடுவேன்,
சுவைத்திடுவேன், ரசித்திடுவேன்
தொடர்வேன்
உன்னில் என்னை கண்டேன்

உணர்ந்தேன்
என்னில் உன்னை கண்டேன்
உணர்ந்தேன்
உன்னில் என்னை தொலைத்தேன்
தொலைப்பேன், தொடர்வேன்

ஆனாலும் புரியவில்லை எனக்கு இன்னும்...

கருத்துகள் இல்லை: