சனி, 6 செப்டம்பர், 2008

என்னவளே!

என் இனியவளே
எத்தனை பேருடன் பழகியிருக்கிறேன்
அத்தனை பேரிடமும் இல்லாத
ஓர் உணர்வு உன்னுடன்
ஆனாலும் வித்தியாசமானவள் நீ
உண்மையானவள் நீ
உணர்வுபூர்வமானவள் நீ
என்னுள் வியாபித்திருப்பவள் நீ
உன் கோபம் மற்றவர்களிடம் இருந்து
உன்னை காப்பாற்றும்
ஆனாலும் நீ என்மேல்
பொய்கோபம் கொண்டிருப்பது புரிகிறது
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
உண்மையை சொன்னதாலா
உணர்வோடு பழகியதாலா
ஏன் இந்த தண்டனை?
மற்றவர்கள் உன்னோடு பேசும்போது
நான்மட்டும் எப்படி ?
புரிந்தாலும் ஏன் ஏற்றுகொள்ள மறுக்கிறாய்?
அன்போடு என்னை அரவணைத்தாய்
பாசமாய் என்னோடு பழகினாய்
உரிமையாய் என்மேல் கோபம் கொண்டாய்
உணர்வுபூர்வமாய் என்னை ஆதரித்தாய்
உரிமையாய் என்னை கண்டித்தாய்

என்னுடைய வலிகளையும் தாங்கினாய்
ஆனாலும் எனக்கு ஏன் இந்த தண்டனை?
உதவிகளை கூட திருப்பி அனுப்பினாய்
அதற்கு விலையும் நிர்ணயித்தாய்
சொல்ல நினைக்கிறாய் மறுக்கிறது மனசு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
ஏன் இவ்வளவு வலிகள் உனக்கு?
நான் செய்த தவறு தான்
உன்னை அதிகம் பேசவிடாததும்
நான் மட்டுமே அதிகம் பேசியதும்
என்னை வெறுக்க மறுக்கிறாய்
ஆனாலும் வெறுப்பதாய் நடிக்கிறாய்
நீ கொடுத்த விலை தான் அதிகம்
ஆனாலும் தவறு என்னுடையது தான்
மீதி எல்லாவற்றிலும் உண்மையை சொன்னேன்
உன்னோடு கொண்டிருந்த உறவை
மட்டும் மறைத்தே பேசினேன்
அதற்கு விதண்டாவாதமும் பேசினேன்
ஆம் உன்னை காதலித்தேன்
காதலிக்கிறேன் காதலிப்பேன்
என்னை நல்லவன் என்றாய்
உன்னை அன்பானவள் இல்லை என்றாய்
ஏன் உன்னை குற்றவாளி ஆக்கினாய்?
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
சொல்லிவிடு மன்னித்துவிடு
தண்டித்துவிடு துண்டித்துவிடாதே என்னவளே!

4 கருத்துகள்:

bharathi.spel சொன்னது…

ஆனாலும் எனக்கு ஏன் இந்த தண்டனை?
உதவிகளை கூட திருப்பி அனுப்பினாய்
அதற்கு விலையும் நிர்ணயித்தாய்
சொல்ல நினைக்கிறாய் மறுக்கிறது மனசு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
ஏன் இவ்வளவு வலிகள் உனக்கு?
நான் செய்த தவறு தான்
உன்னை அதிகம் பேசவிடாததும்
நான் மட்டுமே அதிகம் பேசியதும்
//////////////////

நல்ல வரிகள்...

நம்மை நாம் அறியாது செய்யும் பிழைகள் உறவினை நசுக்கும்!
நெஞ்சார்ந்த கவிதைகள் நண்பா!

வாழ்த்துக்கள்!

ஜியா சொன்னது…

:))) nalla kavithai... thodarnthu ezuthunga

நான் சொன்னது…

நன்றி பாலா அவர்களே

நான் சொன்னது…

நன்றி ஜி அவர்களே,
உங்களுக்காக மீண்டும் எழுதுகிறேன்.