ஞாயிறு, 7 டிசம்பர், 2008

புரியாத புதிராய்!

இங்கு விசமாகிபோகும்
மனிதர்களும் உண்டு
உணர்வுகளை புரிந்துகொள்ளாத
மனிதர்களும் உண்டு
உடுத்தியிருக்கும் உடையின்
உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க
துடிப்பவர்களும் உண்டு
சக மனிதனை தாக்கி அளிக்க
துடிப்பவர்களும் உண்டு
சக மனிதனின் உணர்வுகளை
கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு
ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே
எத்தனை விதமான எண்ணங்கள்
ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு
இல்லாத அத்தனை குணமும் இங்கு
மனிதர்களுக்கு இருக்கிறது
அத்தனையும் வன்முறையா?
இல்லை குரூரமா?
புரியாத புதிராய்!

3 கருத்துகள்:

தாரணி பிரியா சொன்னது…

//ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு
இல்லாத அத்தனை குணமும் இங்கு
மனிதர்களுக்கு இருக்கிறது//

சத்தியமான உண்மைங்க நான்

தாரணி பிரியா சொன்னது…

அத்தனையும் குரூரமான வன்முறையாய் மனதில் பதிந்து கிடக்கிறது என்றே தோணுது.

நான் சொன்னது…

நன்றி தாரணிபரியா
மீண்டும் வரவும் கருத்து சொல்லவும் வேண்டுகிறேன்